சென்னை: தமிழகத்தில் ரூ.6,608 கோடி மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி தலைமையிலான உயர்மட்டக் குழு கூட்டம் திங்களன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசுத் துரைச் செயலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ரூ.6,608 கோடி மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலமாக 6,673 நபர்களுக்கு புதிய நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.