எஸ்.ஐ. எழுத்துத் தேர்வில் பிட் அடித்து பிடிபட்ட காவலர் 

விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற எஸ்.ஐ.க்கான எழுத்துத் தேர்வில் காவலர் ஒருவர் "பிட் " அடித்த போது பிடிபட்டார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற எஸ்.ஐ.க்கான எழுத்துத் தேர்வில் காவலர் ஒருவர் "பிட் " அடித்த போது பிடிபட்டார். 

விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை ஒதிக்கீட்டில் இன்று 857 பேர் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வை எழுதினர். 

இந்த நிலையில் விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் காவலர் ஒருவர் பிட் அடித்துத் தேர்வெழுதினார். எழுத்துத் தேர்வை கண்கணித்த டி.எஸ்.பி. ரவீந்திரன், அந்த காவலரைப்  பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

உடனடியாக  அவரை தேர்வு எழுத அனுமதி மறுத்து, தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றி ஐ.ஜி. கணேசமூத்தி, எஸ்.பி ஜெயக்குமார் ஆகியோர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com