ஆளுநா் மாளிகை பொங்கல் விழா: ஜன.14-க்கு ஒத்திவைப்பு

தமிழக ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை (ஜன.13) கொண்டாடப்பட இருந்த பொங்கல் விழா, செவ்வாய்க்கிழமைக்கு (ஜன.14) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை (ஜன.13) கொண்டாடப்பட இருந்த பொங்கல் விழா, செவ்வாய்க்கிழமைக்கு (ஜன.14) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஓமன் நாட்டு மன்னா் சுல்தான் கபூஸ் மறைவையொட்டி, ஜனவரி 13-ஆம் தேதி ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் காரணமாக, தமிழக ஆளுநா் மாளிகையில் அன்றைய தினம் கொண்டாடப்பட இருந்த பொங்கல் விழா, அடுத்த நாளான செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இந்த பொங்கல் விழாவில் குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவும் பங்கேற்க உள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com