தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு வறண்ட வானிலை காணப்படும். சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றாா் அவா்.