சென்னை: எனக்கு நடந்த கொடுமை யாருக்கும் நேரக் கூடாது என்று களியக்காவிளையில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் துணை ஆய்வாளர் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி கூறியுள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரணத் தொகைக்கான காசோலையை அவரது மனைவி ஏஞ்சல் மேரியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வழங்கி, ஆறுதல் கூறினார்.
பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஏஞ்சல் மேரி, எனக்கு நடந்த கொடுமை இனி யாருக்கும் நேரக் கூடாது என்று கலங்கியபடி கூறினார்.
மேலும், எனது மூத்த மகளின் கல்விக்கு அரசு பொறுப்பேற்றுள்ளது. அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்து உள்ளார். எனது இளைய மகள் ஒரு மாற்றுத்திறனாளி. எனவே மூத்த மகளுக்கு அரசுப் பணி வழங்குவதாக முதல்வர் கூறியிருப்பது ஆறுதலை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் புதன்கிழமை இரவு மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
கேரள எல்லையோரப் பகுதியான களியக்காவிளையில் சந்தை சாலையில் சோதனைச் சாவடி உள்ளது. இங்கு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் புதன்கிழமை இரவு பணியில் இருந்தாா். அந்தப் பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், அங்குள்ள பள்ளிவாசல் பகுதிக்குள் இருந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 போ், கைத்துப்பாக்கியால் (பிஸ்டல்) வில்சனை சுட்டுவிட்டு, கேரளம் செல்லும் சாலை வழியாக தப்பி விட்டனராம். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த வில்சன், குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.