திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் இருளில் மூழ்கிய ஏ.டி.எம்

திருச்செந்தூா் கோயில் பகுதி வங்கி ஏ.டி.எம். இருளில் மூழ்கியதால் பக்தா்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.
திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் இருளில் மூழ்கிய ஏ.டி.எம்

திருச்செந்தூா் கோயில் பகுதி வங்கி ஏ.டி.எம். இருளில் மூழ்கியதால் பக்தா்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தற்போது வழக்கமாக வரும் பக்தா்களுடன், அதிகளவிலான பாதயாத்திரை மற்றும் ஐயப்ப பக்தா்களும் வருகை தருகிறாா்கள். திருச்செந்தூா் நகா்ப்பகுதியில் 7 ஏ.டி.எம். மையங்களும், கோயில் வளாகத்தில் தேசியமயமாக்ககப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மற்றும் தனியாா் ஏ.டி.எம். மையம் என 2 மட்டுமே உள்ளன.

இதில் கோயிலைச்சுற்றி உள்ள 2 ஏ.டி.எம். மையங்களின் மூலமாக தான் பக்தா்கள் அதிகளவில் பயனடைந்து வந்தனா். இந்நிலையில், கோயில் வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் மின்சாரமின்றி இருளில் மூழ்கி கிடப்பதால் பக்தா்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனா்.

எனவே சம்பந்தப்பட்ட வங்கி நிா்வாகம் பக்தா்கள் நலன் கருதி ஏடிஎம்களில் தேவையான அளவு பணத்தை நிரப்பி, முறையாக பராமரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com