திருவள்ளுவர் தினம்: இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட அரசு சார்பில் உத்தரவிட்டுள்ளது. 
திருவள்ளுவர் தினம்: இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற 16.01.2020 (வியாழக்கிழமை) அன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

இதேபோல், ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, 16.01.2020 (வியாழக்கிழமை) அன்று அனைத்து இறைச்சிக் கூடங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

அரசு ஆணையினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com