தேன்கனிக்கோட்டை: அரசுப் பேருந்து படியிலிருந்து கீழே தவறி விழுந்து பள்ளி மாணவி உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் 7ஆம் வகுப்பு படித்து வரும் தடிக்கல் கிராமத்தை சேர்ந்த அக்ஷயா என்கின்ற மாணவி, செவ்வாயன்று பள்ளி முடித்து விட்டு அரசு பேருந்தில் வீட்டிற்க்கு சென்று கொண்டிருக்கும் போது அரசு பேருந்து படியிலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.