காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடருமா என்பது பற்றி காலம் பதில் சொல்லும் என்று திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தில்லியில் காங்கிரஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸூடன் ஏற்பட்ட கருத்து வேடுபாடு காரணமாகவே இந்த கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை எனக் கூறப்பட்டது. இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடருமா என்பது பற்றி காலம் பதில் சொல்லும். மு.க.ஸ்டாலினை விமர்சித்து கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டபின் காங்கிரஸ் தலைமையிலான கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்?.
ஸ்டாலினை விமர்சித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையால் திமுகவினர் கவலையில் உள்ளனர் என்றார்.