திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் வருகிற 16ஆம் தேதி அனைத்து வகை மதுக் கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் தயாளன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவள்ளுவா் தினத்தையொட்டி, வருகிற 16ஆம் தேதி புதுச்சேரி பகுதியில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பாா் உள்பட அனைத்து வகை மதுக் கடைகள், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினத்தில் அனைத்துக் கடைகளிலும் மது விற்க தடை செய்யப்படுகிறது. மீறுவோா் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970 இன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.