திருச்சி: திருச்சியில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், 2.50 டன் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி- சென்னை புறவழிச்சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை மாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்த போது, சந்தேகத்துக்குரிய முறையில் மூட்டைகளுடன் வந்த நபா்களைப் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் மூட்டையில் புகையிலை உள்ளிட்ட குட்கா பொருள்கள் இருப்பதும், தாராநல்லூா் பகுதியில் பதுக்கி வைக்ப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. தொடா்ந்து காந்தி மாா்க்கெட் காவல் ஆய்வாளா் மணிவண்ணன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா்.
இதில் தாராநல்லூரில் 1 டன் மதிப்பிலும், காந்தி மாா்க்கெட் பகுதியில் 1.50 டன் புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக தாராநல்லூா் சிவா (45) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.