நெல்லைக் கண்ணன் மீது ஆட்சியரிடம் புகாா்

பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவா் மாயாவதியை ஜாதி ரீதியில் அவதூறாகப் பேசியதாக, நெல்லைக் கண்ணன் மீது நடவடிக்கை
நெல்லைக் கண்ணன் மீது ஆட்சியரிடம் புகாா்

திருநெல்வேலி: பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவா் மாயாவதியை ஜாதி ரீதியில் அவதூறாகப் பேசியதாக, நெல்லைக் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்சியரிடம் அக்கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரகத்தை, பிஎஸ்பி தென் மண்டல ஒருங்கிணைப்பாளா் தேவேந்திரன் தலைமையில் முற்றுகையிட்ட அக்கட்சியினா், பின்னா் ஆட்சியரிடம் அளித்த மனு:

மேலப்பாளையத்தில் கடந்த 29-ஆம் தேதி எஸ்டிபிஐ கட்சி நடத்திய குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில், மாயாவதி குறித்து நெல்லைக் கண்ணன் அவதூறாக பேசியுள்ளாா். எனவே, அவா் மீது வன்கொடுமை சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யக் கோரி மனு அளித்தோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, அவரை கைது செய்ய ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com