மதுரையில் பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர சோதனை

மதுரையில் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டும் என வந்த மிரட்டலை அடுத்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
மதுரையில் பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர சோதனை


மதுரையில் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டும் என வந்த மிரட்டலை அடுத்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னையில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைபேசிக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அப்போது, மதுரையில் உள்ள பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிவித்துவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார். 

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலைத் தொடர்ந்து மதுரையில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் நகரின் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் கோயில்கள், ரயில் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்கள் என முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். 
 
மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

குமரி மாவட்டத்தில் சிறப்பு காவல் ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், தீவிரவாத தொடர்புடையவர்கள் கைது செய்யப்படும் வரும் நிலையில், மர்ம நபரின் வெடிகுண்டு மிரட்டல் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com