மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் என்ன செய்தார்? என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் அரியலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா காலத்திலிருந்தே இதை நான் கூறிவருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, பாஜக தலைவர் பதவி கிடைக்காத விரக்தியால் தமிழக அரசை பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சிக்கிறாரா. நல்லாட்சி நடப்பதாக தமிழக அரசை பாராட்டிய மத்திய அரசை பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சிக்கிறாரா?
மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் என்ன செய்தார்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.