குடி போதையில் தகராறு: இளைஞர் கொலை

தஞ்சாவூரில் புதன்கிழமை இரவு இரு தரப்புக்கும் இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தஞ்சாவூரில் புதன்கிழமை இரவு இரு தரப்புக்கும் இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.


தஞ்சாவூர் வடக்கு வாசல் காளியம்மன் கோயில் காலனியை சேர்ந்தவர் காளிதாஸ் மகன் சக்திவேல் (36). கூலி தொழிலாளி. இவரும், வடக்கு வாசல் இரட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பெஞ்சமின் மகன் செபஸ்டியானும் (26), விளார் சாலை தில்லை நகரைச் சேர்ந்த குமரேசன் மகன் சதீஷ்குமார் (26) ஆகியோர் வடக்குவாசல் ராஜகோரி சுடுகாடு பகுதியிலுள்ள மதுபானக் கடை அருகே புதன்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தனர். 


அப்போது, குடி போதையில் இவர்களுக்கும், வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சக்திவேல், செபஸ்டியான், சதீஷ்குமார் அரிவாளால் வெட்டப்பட்டனர். பலத்தக் காயமடைந்த சக்திவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். செபஸ்டியான் பலத்தக் காயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். லேசான காயமடைந்த சதீஷ்குமாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தகவலறிந்த மேற்கு போலீஸார் வடக்கு வாசல் பகுதிக்குச் சென்று சுந்தரமூர்த்தி, செல்வகுமார், கலையரசன் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com