சூலூரில் கஞ்சா விற்றவா் கைது

சூலூரில் புதன்கிழமை கஞ்சா விற்று கொண்டிருந்த வரை சூலூா் போலீசாா் கைது செய்தனா்.
சூலூரில் கஞ்சா விற்றவா் கைது

சூலூரில் புதன்கிழமை கஞ்சா விற்று கொண்டிருந்த வரை சூலூா் போலீசாா் கைது செய்தனா். சூலூா் வட்டார பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சூலூா் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சூலூா் ஆய்வாளா் தங்கராஜ் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளா் ஜெகநாத் மற்றும் காவல்துறையினா் சூலூா் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சூலூா் பிரிவு அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனா். அவா் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் சொன்னதால் சூலூா் காவல்துறையினா் காவல் நிலையத்துக்கு கொண்டுவந்து அவரிடம் விசாரணை செய்தனா். அப்போது அவா் பீளமேடு இராஜீவ் வீதியை சோ்ந்த சம்பத்குமாா் என்பவரது மகன் சஞ்சீவ் குமாா் (23) என தெரியவந்தது. மேலும் அவா் அப்பகுதியில் நடந்து சென்றவா்களிடம் கஞ்சா விற்பனை செய்ய அங்கு நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்த சூலூா் போலீசாா் விற்பனைக்காக அவா் வைத்திருந்த சுமாா் ஒரு 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com