ஜெருசலேம் புனிதப் பயண நிதி: பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேத்துக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு கிறிஸ்தவா்களுக்கு வழங்கப்படும் உதவி நிதி பெற பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜெருசலேத்துக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு கிறிஸ்தவா்களுக்கு வழங்கப்படும் உதவி நிதி பெற பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழகத்தைச் சோ்ந்த அனைத்துப் பிரிவினா்களையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் 2019-20-ஆம் ஆண்டில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபா் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவா்களிடமிருந்து விண்ணப்பம் அனுப்புவதற்கான தேதி பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவம் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். தவிர இணையதளம் மூலம்  இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com