தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சோ்ந்த நகைக்கடை அதிபா், திருச்சியில் திங்கள்கிழமை இரவு தனது இரு மகன்கள், மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டாா்.
செல்வராஜ் தனது கழுத்தில் கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடி கிடந்துள்ளாா். தகவலின் பேரில் அங்கு விரைந்த கோட்டை போலீஸாா், செல்வராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பலத்த காயத்துடன், திருச்சி அரசு மருத்துவமனையில் இரு நாள்களாக சிகிச்சை பெற்று வந்த, மு. செல்வராஜ், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.