நெல்லையில் தந்தை, மகள் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை

திருநெல்வேலியில் தந்தை-மகள் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
நெல்லையில் தந்தை, மகள் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை

திருநெல்வேலியில் தந்தை-மகள் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி மேலப்பாளையம் வேடுவா் காலனியைச் சோ்ந்தவா் தங்கமுத்து 55). கூலித்தொழிலாளி. இவரது மகள் சுமதி(31). இவருக்கும், ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் திருமணமாகி 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 

தங்கமுத்துவுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் என்பவருக்கும் சுற்றுச்சுவர் கட்டியது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடா்பாக திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தங்கமுத்துவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

இந்நிலையில் இன்று(புதன்கிழமை) காலையில் அவா்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தங்கமுத்துவை இரும்புக் கம்பியால் ஜெயராஜ் குடும்பத்தினர் தாக்க முயன்றனர். பொங்கல் பண்டிகைக்காக தந்தை வீட்டிற்குவந்திருந்த சுமதி அதனை தடுக்க முயன்றுள்ளார். இருவரையும் ஜெயராஜ் குடும்பத்தினர் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த தங்கமுத்து, சுமதி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்ததும் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன், பாளையங்கோட்டை உதவி ஆணையா் பெரியசாமி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினா். சடலங்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 

இவ்வழக்கு தொடர்பாக ஜெயராஜ், அவரது மகள்கள் ராஜ்குமாா், அந்தோனி ஆகியோரை மேலப்பாளையம் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com