சூரியூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டி பெண் படுகாயம்

திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் இடத்தில் மாடு முட்டியதில் பார்வையாளர்கள் வரிசையில் இருந்த பெண் படுகாயமடைந்தார்.
திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி
திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி

திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் இடத்தில் மாடு முட்டியதில் பார்வையாளர்கள் வரிசையில் இருந்த பெண் படுகாயமடைந்தார்.

மாட்டு பொங்கலையொட்டி திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 550 காளைகள் மற்றும் 500 மாடுபிடி வீரர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு களமிறக்கப்படுகின்றனர். ஜல்லிக்கட்டைக் காண சுமார் 5 ஆயிரம் பேர் வந்துள்ளனர்.

இந்த நிலையில் வாடிவாசலில் விடப்பட்ட காளை ஒன்று திடலை விட்டு வெளியே வரும்போது பார்த்துக்கொண்டிருந்த திருச்சி உறையூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மனைவி ஜோதிலட்சுமி (52) வயிற்றில் முட்டியதில் பலத்த காயமடைந்தார். திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com