சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தேநீர் கடைக்காரர், ரயில்களின் கழிவறைகளுக்குப் பயன்படுத்தப்படும் நீரை எடுத்து பாலைக் காய்ச்சிய விடியோ நேற்று வைரலானது.
ரயில்களின் கழிவறைகளில் இருக்கும் டேங்குகளை நிரப்பப் பயன்படும் நீரைப் பிடித்து, பால் பாத்திரத்தில் ஊற்றும் கடைக்காரரின் விடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.
இந்த நிலையில், அந்த கடையை மூடி ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.