சாலைப் பாதுகாப்பு வாரம்: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

ராணிபேட்டையில் 31-வது சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.
சாலைப் பாதுகாப்பு வாரம்: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

ராணிபேட்டையில் 31-வது சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட எஸ்பி ஆ.மயில்வாகனன் முன்னிலை வகித்தார். இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் கொடியசைத்து  தொடங்கி வைத்தார். 

இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு வாரம் 20.01.2020 முதல் 27.01.2020 வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த சாலை பாதுகாப்பு வாரத்தில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு, தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இந்த பேரணியானது ராணிப்பேட்டை முத்துக்கடையில் தொடங்கி பழைய பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, ஆற்காடு  முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பஜார் ரோடு, எல்.எப்.சி ரோடு, காரை கூட்ரோடு, நவல்பூர் வழியாக முத்துக்கடை வந்தடைந்தது.

நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் இளம்பகவத், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாட்டப்பசாமி, வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், போக்குவரத்து ஆய்வாளர் முகேஷ்குமார், ஓட்டுநர் பயிற்சி சங்கத் தலைவர் மணி, இருசக்கர வாகன ஓட்டுனர் நலச்சங்கத் தலைவர் ஜெகநாதன் மற்றும் லயன்ஸ் சங்கத்தினர், ரோட்டரி சங்கத்தினர், மகளிர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com