பெரியார் குறித்த பேச்சு: ரஜினி வீடு அருகே பெரியார் தி.க.வினர் போராட்டம்

பெரியாரை பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த்தை கண்டித்து அவரது வீடு அருகே பெரியார் தி.க.வினர் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
பெரியார் குறித்த பேச்சு: ரஜினி வீடு அருகே பெரியார் தி.க.வினர் போராட்டம்

பெரியாரை பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த்தை கண்டித்து அவரது வீடு அருகே பெரியார் தி.க.வினர் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘துக்ளக்’ வார இதழின் பொன் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகா் ரஜினிகாந்த் சேலத்தில் 1971-ல் நடந்த பேரணியில் ராமர் மற்றும் சீதை நிர்வாணப்படுத்தி, செருப்பு மாலை அணிவித்து கொன்டுவரப்பட்டதாகவும், அதை துக்ளக் பத்திரிகை மட்டும் தான் துணிச்சலுடன் கண்டித்தது என்று பேசியிருந்தார். 

அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் துக்ளக் 50-ஆவது ஆண்டு நிகழ்ச்சியில் தான் பேசியது உண்மை என்றும் எனவே அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெரியார் விவகாரத்தில் உண்மை தெரியாமல் ரஜினி பேசுகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதனிடையே தன் பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் பெரியார் தி.க. கட்சியினர் அறிவித்திருந்தனர். இதனால் ரஜினி வீட்டை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது. எனினும் அறிவித்தபடி இன்று ரஜினிகாந்த் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியில் பெரியார் தி.க.வினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். 

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது ரஜினிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com