உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

ரஜினி உண்மை தெரியாமல் பேசுகிறார் - உதயநிதி ஸ்டாலின்

பெரியார் விவகாரத்தில் உண்மை தெரியாமல் ரஜினி பேசுகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பெரியார் விவகாரத்தில் உண்மை தெரியாமல் ரஜினி பேசுகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘துக்ளக்’ வார இதழின் பொன் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகா் ரஜினிகாந்த் சேலத்தில் 1971-ல் நடந்த பேரணியில் ராமர் மற்றும் சீதை நிர்வாணப்படுத்தி, செருப்பு மாலை அணிவித்து கொன்டுவரப்பட்டதாகவும், அதை துக்ளக் பத்திரிகை மட்டும் தான் துணிச்சலுடன் கண்டித்தது என்று பேசியிருந்தார். 

அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் துக்ளக் 50-ஆவது ஆண்டு நிகழ்ச்சியில் தான் பேசியது உண்மை என்றும் எனவே அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெரியார் விவகாரத்தில் உண்மை தெரியாமல் ரஜினி பேசுகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, பெரியார் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் உண்மை தெரியாமல் பேசுகிறார், உண்மை தெரிந்ததும் மன்னிப்பு கேட்பார். ஏற்கெனவே காவிரி விவகாரத்தில் உண்மை தெரிந்ததும் கர்நாடகவில் மன்னிப்பு கோரினார் ரஜினி என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com