சென்னை: சென்னை - தரமணி டிஎல்எஃப் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாகக் கட்டப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.
சென்னை - தரமணி டிஎல்எஃப் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.5,000 கோடியில் டிஐடீசிஓ மற்றும் டிஎல்எஃப் இணைந்து உருவாக்கவிருக்கும் தகவல் தொழில்நட்ப வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி, அதன் மாதிரி கட்டட வடிவமைப்பினை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிட்டார்.
தகவல் தொழில்நுட்பப் பணிகள் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளுக்காக 27.04 ஏக்கர் பரப்பளவில் அமைக்கவிருக்கும் டவுன் ட்டவுன் சென்னை வளாகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.