பெரியாரை பற்றி ரஜினிக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது: துரைமுருகன்

பெரியாரை பற்றி ரஜினிக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

பெரியாரை பற்றி ரஜினிக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘துக்ளக் 50’-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், சேலத்தில் 1971-இல் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியின்போது, ராமர் மற்றும் சீதையின் உடைகள் இல்லாத படங்கள் எடுத்து வரப்பட்டன. அவற்றுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. இந்தச் செய்தியை ‘துக்ளக்’ இதழ் தைரியமாக வெளியிட்டது என்று கூறினார். 

ரஜினியின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினிகாந்த் கூறுவதுபோன்ற சம்பவம் 1971 பேரணியில் நடைபெறவில்லை. எனவே, தனது கருத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் மன்னிப்புக் கேட்கும் வரை அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் பெரியார் இயக்கங்கள் அறிவித்தன. 

இந்த நிலையில், சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ரஜினி தனது கருத்துக்கு ஆதாரமாக தனியார் பத்திரிகை ஒன்றைக் காண்பித்து, சேலத்தில் 1971-இல் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து நான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க முடியாது. இது மறுக்க வேண்டிய சம்பவம் இல்லை. மறக்க வேண்டிய சம்பவம் எனக் கூறினார். 

இதுகுறித்து நாகக்கல்லில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பெரியார் மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும் விவாதப்பொருளாக இன்றும் நிலைத்து நிற்கிறார். பெரியாரை பற்றி ரஜினிக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது. ஸ்டாலின் கூறியது போல் பெரியாரை பற்றி ரஜினி பேசாமல் இருப்பது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com