திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள தண்டலம் கிராமத்தில் சிமெண்ட் கடை ஒன்றில் 1.60 லட்சம் திருடு போயுள்ளது.
கடைக்காரர் வீரராகவர் என்ற பாபு கல்லாப்பெட்டியில் பணத்தை வைத்து விட்டு இரவு வீடு திரும்பினார்.
இந்த நிலையில், மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு அதிலிருந்த ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் ரூபாய் திருடு போயுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த கடைக்காரர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பெரியபாலம் காவல்துறையினர், கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.