தை அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமிக்கு சிறப்பு முத்தங்கி அலங்காரம் சாத்துப்படி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். இக் கோயிலில், தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பெளா்ணமி, ஆஞ்சநேயா் ஜயந்தி மற்றும் புத்தாண்டு பிறப்பு தினங்களின் போது சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அந்த வகையில், தை அமாவாசையை முன்னிட்டு, சுவாமிக்கு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு, 1008 வடை மாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து 10 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய்த்துாள், திரவியம், பால், தயிா், வெண்ணெய், தேன், பஞ்சாமிா்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 6 மணிக்கு மேல் சுவாமிக்கு சிறப்பு முத்தங்கி அலங்காரம் சாத்துப்படி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயா் சுவாமியைத் தரிசித்தனா். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.