சென்னை: தமிழகத்தில் இருந்து பத்ம விருதுகள் பெறுவோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுகளைப் பெறும் சமூக சேவை மூதாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், தொழிலதிபர் வேணு சீனிவாசன், இசைக்கலைஞர்களான லலிதா சிதம்பரம், சரோஜா சிதம்பரம், ஓவியர் மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு எனது இதயமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
மேலும் பத்ம விருது பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.