ஈரோடு நம்பியூரில் மத நல்லிணக்க குடியரசு தின விழா

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அல் ஹிதாயா மஸ்ஜித் சுன்னத் ஜமாதில் மத நல்லிணக்க குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
ஈரோடு நம்பியூரில் மத நல்லிணக்க குடியரசு தின விழா

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அல் ஹிதாயா மஸ்ஜித் சுன்னத் ஜமாதில் மத நல்லிணக்க குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு பள்ளிவாசல் தலைவர் ரஷீத் அலி தலைமை தாங்கினார். 

கிறிஸ்துவ சபை பாதிரியார்கள் டேவிட் ராஜா, ஆண்ட்ரூஸ், ஜெபஸ்டின், நம்பியூர் ஈஸ்வரன் கோவில் அறங்காவலர் ரத்தினசாமி, நம்பியூர் வர்த்தக சங்கத் தலைவர் லிங்கராஜ், செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துல் வாஹித் ஹாஜியார் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது. கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவில் நம்பியூர் அரிமா சங்க நிர்வாகிகள் மயில்சாமி, சதீஷ், நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் லட்சுமணன், நம்பியூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com