தூத்துக்குடியில் குடியரசு தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.
தூத்துக்குடியில் 71வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டதுடன் 61 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.