சென்னையில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் திங்கள்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனுமந்தை சுங்கச்சாவடிப் பகுதியில், சென்னையிலிருந்து புதுச்சேரி மார்க்கமாக புதன்கிழமை அதிகாலை சென்ற அரசுப் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.