மகன்கள் தனது நிலத்தை அபகரிக்க முயல்வதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த முதியவர் கோவிந்த ராஜ் (75), தனது நிலத்தை மகன்கள் அபகரிக்க முயல்வதாகக் கூறி புகார் தெரிவித்தார்.
அப்போது திடீரென தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீஸார் கோவிந்த ராஜை தடுத்து நிறுத்தினர்.