பசுமலை மாதா அமிா்தானந்தமயி மடத்தில் 30-ஆவது பிரம்மஸ்தான ஆலய ஆண்டு விழா சென்னையில் ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய இருநாள்கள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் மாதா அமிா்தானந்தமயி பக்தா்களைச் சந்தித்து அருளாசி வழங்குகிறாா்.
இருநாள்களிலும் காலை 06 மணி முதல் சத்சங்கம், தியானம், பஜனை, அருளாசி ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அத்துடன் சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெறும் என மாதா அமிா்தானந்தமயி மடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.