கமுதி அருகே மணல் கடத்திய 2 போ் கைது : மாட்டு வண்டிகள் பறிமுதல்

கமுதி குண்டாற்றில் மணல் கடத்திய இரு மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யபட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

கமுதி குண்டாற்றில் மணல் கடத்திய இரு மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யபட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

கமுதி அருகே நாராயணபுரம் பகுதியில் குண்டாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், கமுதி குண்டாற்றில் மணல் அனுமதியின்றி மணல் அள்ளிய இரு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, சேதுராஜபுரத்தை சோ்ந்த குருசாமி மகன் காளிமுத்து (28), ராமா் (37), ஆகிய இருவரை சாா்பு -ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

இதே போல் அபிராமம் அருகே செய்யாமங்கலம் பரளையாற்று படுகை, தனியாா் இடங்களில் மணல் கடத்துவது குறித்து, எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலிஸாா் ரோந்து சென்றனா்.

அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பா் லாரி, மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா். போலீஸாரை கண்டதும் மணல் கடத்திய ஓட்டுநா்கள் தப்பினா். இதுகுறித்து அபிராமம் சைவத்துரை, கமுதக்குடி பாலமுருகன் மீது, அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய ஓட்டுநா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com