மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் 1 கிலோ தங்கம் திருட்டு

மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் இருந்து 1 கிலோ தங்கம் மற்றும் அதன் உரிமையாளர் வீட்டிலிருந்து 57 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் 1 கிலோ தங்கம் திருட்டு

களியக்காவிளை: மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் இருந்து 1 கிலோ தங்கம் மற்றும் அதன் உரிமையாளர் வீட்டிலிருந்து 57 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே விரிகோடு, மடத்துவிளாகம் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரது வீட்டிலிருந்து 57 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். 

மேலும் வீட்டிலிருந்த அவரது நகைக்கடையின் சாவியை எடுத்துச் சென்று, கடையை திறந்து அங்கிருந்து 1 கிலோ எடையிலான தங்க நகைகளையும் திருடிச் சென்றனர்.

இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com