கரோனா வைரஸ்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளின் கண்காணிப்பில் 11 மாணவர்கள்

சீனாவில் இருந்து வந்த 11 இந்திய மாணவர்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கரோனா வைரஸ்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளின் கண்காணிப்பில் 11 மாணவர்கள்


காஞ்சிபுரம்: சீனாவில் இருந்து வந்த 11 இந்திய மாணவர்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கரோனா வைரஸ் தொற்று சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. கரோனா வைரஸ் பாதித்து இதுவரை சீனாவில் 213 பேர் உயிரிழந்தனர். 9,692 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் திரும்ப வரவழைக்கப்பட்டு மொத்தம் 11 பேர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் தங்க வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அவர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com