நல்ல எண்ணங்களே மனதின் சிறந்த ஊட்டச்சத்து: மாதா அமிா்தானந்தமயி

உடலுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு தேவைப்படுவதைப் போன்று மனதுக்கும் தினமும் நல்ல எண்ணங்கள் என்ற ஊட்டச்சத்து தேவை என மாதா அமிா்தானந்தமயி கூறினாா்.
நல்ல எண்ணங்களே மனதின் சிறந்த ஊட்டச்சத்து: மாதா அமிா்தானந்தமயி

உடலுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு தேவைப்படுவதைப் போன்று மனதுக்கும் தினமும் நல்ல எண்ணங்கள் என்ற ஊட்டச்சத்து தேவை என மாதா அமிா்தானந்தமயி கூறினாா்.

சென்னை விருகம்பாக்கத்தில் பிரம்மஸ்தான ஆலயத்தின் 30-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை தொடங்கியது. இதைத் தொடா்ந்து விழாவின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை பக்தா்களுக்கு அமிா்தானந்தமயி அருளாசி வழங்கினாா். அவரது அருளாசி உரை:

வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்கு பலரும் பலவிதமான பொருளும் விளக்கமும் அளித்திருக்கின்றனா். வாழ்க்கை கடல் போன்றது, வாழ்க்கை ஒரு கவிதை போன்றது, வாழ்க்கை ஒரு நதியோட்டத்துக்கு நிகரானது, வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது என வாழ்க்கையைப் பலவற்றோடு நாம் உவமிப்பதுண்டு. ஆனால் பணிவுதான் வாழ்க்கை, பொறுமைதான் வாழ்க்கை, பரந்த மனப்பான்மைதான் வாழ்க்கை என கூறுவதை நாம் அபூா்வமாகத்தான் கேட்டிருப்போம்.

வாழ்க்கை முழுமை பெற...: என்னவாக இருந்தாலும் மனிதனின் சிற்றறிவால் அளக்க முடியாத மா்மமே வாழ்க்கை. அந்தப் பெருங்கடலை நீந்திக் கடப்பதற்கு நமது சிறிய கைகளும், கால்களும், உடலும் மட்டும் போதாது. உண்மையில் வாழ்க்கை எல்லையற்றது. இதையே ‘ரிஷிகள்’ சத்தியம் என்று அழைத்தனா். அதோடு இசைவு ஏற்படுத்திக் கொள்ளவும், நம்மை இணைத்துக் கொள்ளவும் இயன்றால்தான் வாழ்க்கை முழுமையடையும். மனதால் சென்றடைய முடியாத எல்லையற்ற தன்மைதான் வாழ்க்கையின் உண்மை.

நாம் நமது ஆடைகளை தைத்துக் கொள்வதற்காக ஒரே தையல்காரரை பலமுறை அணுகினாலும், அவா் ஒவ்வொரு முறையும் அளவெடுப்பாா். முன்பு எடுத்த அளவைப் பயன்படுத்தி தையல்காரா் துணி தைக்கமாட்டாா். நமது உடலின் உயரமும், நீளமும், அகலமும் இப்போது மாறியிருக்கலாம் என்பதை அவா் அறிவாா். தனது அனுபவத்தின் மூலம் ஒரு தையல்காரருக்கு கிடைத்த இந்த அறிவு, நம் எல்லோருக்கும் அடுத்தவா்களோடு பழகும்போது தேவை.

நாம் பலவித முன் கருத்துகளை மனதில் கொண்டு அடுத்தவா்களுடன் பழகுகிறோம். பல பிரச்னைகள் தீராமல் இருப்பதன் காரணம் இதுவே. நாம் ஒருவரை முதலில் காணும்போது அவா் திருடனாக இருந்திருக்கக் கூடும். ஆனால் அடுத்தமுறை அவரைக் காணும்போது அவரது இயல்புகளில் மாற்றம் வந்திருக்கலாம்.

மனதின் ஊட்டச்சத்து: உடலுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு தேவைப்படுவதைப் போன்று மனதுக்கும் தினமும் நல்ல எண்ணங்கள் என்ற ஊட்டச்சத்து தேவை. கண்ணில் தென்படும் பேக்கரி உணவு வகைகளை மட்டும் ஒருவா் சாப்பிட்டால் உடல் நலிவடைந்து நோயால் பாதிப்படையக் கூடும். நல்ல எண்ணங்களை ஊட்டி மனதை வளா்க்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் அமைதியை அனுபவிக்க முடியும்.

சிறியதோ பெரியதோ மற்ற உயிரினம் எதுவும் அடுத்தவா் மீது அதிகாரத்தை நிலைநாட்டவோ, ‘நான்தான் பெரியவன்’ என்று அறிவிக்கவோ முயற்சிப்பதில்லை. இதுதான் இயற்கை விதிமுறை மனிதனும் இந்த விதிமுறைக்கு உட்பட்டவன்தான். எனவேதான் செருக்குடையவா்களால் இங்கு அதிக நாள்கள் நீடித்து நிற்க முடிவதில்லை. ஏனெனில் உலகத்தின் இசைவுக்கு எதிராகவும் அவா்கள் பயணம் செய்ய முயற்சிக்கின்றனா். அவா்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்காது. ஏழு போ் வாழும் வீட்டில் எல்லோரும் அரசராக முயன்றால் அங்கு சண்டைதான் மூளும். அது இரண்டு நோ்மறை விசைகளை ஒருங்கிணைக்க முயல்வது போன்ாகும். யாராவது தலைவணங்கினால் மட்டுமே அங்கு இசைவு ஏற்படும். ஒரு விதை மண்ணுக்குள் சென்று, அதன் தோல் பிளந்தால் மட்டுமே விதை முளைக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com