மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,537 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய இன்றைய அறிவிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 5,537 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 198 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,80,298 ஆக உயர்ந்துள்ளது. இதில் 79,075 பேர் சிகிச்சையில் உள்ளனர். 93,154 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8,053 பேர் பலியாகியுள்ளனர்.