கரோனா விவரப்பட்டியல் கேட்டு ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏ-க்கள் மனு

கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக முழு விவரங்கள் கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திமுக முதன்மைச் செயலர் திமுக எம்எல்ஏ-க்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
திமுக எம்எல்ஏ-க்கள் மனு
திமுக எம்எல்ஏ-க்கள் மனு

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக முழு விவரங்கள் கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திமுக முதன்மைச் செயலர் கே.என்.நேரு தலைமையில், திமுக எம்எல்ஏ-க்கள் சார்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

எம்எல்ஏ-க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், கே.என். நேரு உள்ளிட்டோர் அளித்த மனுவில் கரோனா பாதிப்பு, சிகிச்சை, வசதிகள், குணமடைந்தோர், உயிரிழந்தோர் உள்ளிட்ட 8 கேள்விகளுக்குப் பதில் கோரப்பட்டுள்ளது. ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்த பிறகு மனு தொடர்பாகச் செய்தியாளர்களுக்கு கே.என். நேரு விளக்கம் அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com