சென்னை: தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் மண்டலங்களில் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த கே.பி.அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது அவருக்கு கரோனா தொற்று இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதனை அமைச்சா் அன்பழகன் மறுத்து வந்தாா். இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அன்பழகனுக்கு
கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
லேசான இருமல் அவருக்கு இருந்ததையடுத்து அதற்குரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அமைச்சா் அன்பழகன் நலமுடன் உள்ளாா். அவரது உடல் நிலையும் சீராக உள்ளது என்று இது தொடா்பாக, மியாட் மருத்துவமனையின் மேலாண் இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.