ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை  நீக்கத்தை கண்டித்து போராட்டம்

ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா பணியிடை  நீக்கத்தை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை  நீக்கத்தை கண்டித்து போராட்டம்

ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா பணியிடை  நீக்கத்தை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியின் செயல் அலுவலராக பதவி வகித்து வந்த ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில்  கடந்த 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அரசு அலுவலகத்தில் ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய காரணத்தினால், பேரூராட்சி இயக்குனர் அவர்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பணியிட நீக்கத்தை கண்டித்து  துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்பு மீண்டும் செயல் அலுவலர் ராஜாவே வேண்டும் எனக் கூறி, வேலைக்குச் செல்ல மாட்டோம் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com