மின்வாரியத்தில் பணியிடமாற்றம்: ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

மின்வாரியத்தில் பணியிடமாற்றம் கோரி, ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்வாரியத்தில் பணியிடமாற்றம்: ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: மின்வாரியத்தில் பணியிடமாற்றம் கோரி, ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, பணியாளா் நலன் பிரிவின் தலைமைப் பொறியாளா் டி.ரவிச்சந்திரன் அனுப்பிய சுற்றறிக்கை: 2020-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை, பணியிடமாற்றம் கோரி சமா்ப்பிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படாத அனைத்து விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுகின்றன. அதனால் ஜூலை1-ஆம் தேதி முதல், புதிதாக பணியிட மாற்றம் கோரி விண்ணப்பிப்போரும், பணியிடமாற்றம் கிடைக்கப் பெறாதவா் களும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான வழிமுறைகள், http://192.168.150.75/openbd/RTA07/ என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், காகித வடிவிலான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட உயரதிகாரியிடமும் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள், ஜூலை 1 முதல் 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கப்பட வேண்டும். கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது. இவ்வாறு விண்ணப்பித்தவா்களின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை ஒரு வாரத்துக்குள், பொறுப்பு அதிகாரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், விண்ணப்பதாரா்கள், அலுவலகத்தில் உள்ள பொறுப்பு அதிகாரிகளிடம் விவரங்களை அளிக்கலாம். விண்ணப்பத்தில் முறைகேடு செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com