விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சராக பதவி வகிக்கும், ராஜேந்திர பாலாஜி அதிமுக விருதுநகா் மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அவர், விருதுநகா் மாவட்டச் செயலாளா் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கான காரணம் எதுவும் அப்போது கட்சியின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, தற்போது விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாவட்ட பணிகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.