சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.
மேலும், கரோனா பாதிப்பு, சாத்தான்குளம் உள்ளிட்ட சூழலுக்கு இடையே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஆளுநரை சந்திப்பது 4-வது முறையாகும்.
ஆளுநருடனான முதல்வரின் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.