கரோனா: மதுரையில் மூத்த வழக்குரைஞர் பலி

மதுரையில் மூத்த வழக்குரைஞர் மணிவண்ணன் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 
மதுரையில் மூத்த வழக்குரைஞர் மணிவண்ணன் கரோனாவுக்கு பலி
மதுரையில் மூத்த வழக்குரைஞர் மணிவண்ணன் கரோனாவுக்கு பலி

மதுரையில் மூத்த வழக்குரைஞர் மணிவண்ணன் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 

மதுரை டி.வி.எஸ் நகரைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் மணிவண்ணன் (65). இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு கரோனா தொற்று அறிகுறி இருந்ததால், தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்குத் தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து, மருத்துவர்கள் வழக்குரைஞருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் வழக்குரைஞர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com