செங்கல்பட்டில் இன்று 169 பேருக்கு கரோனா: பாதிப்பு 6,308 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 169 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
corona test
corona test


செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 169 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 169 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 6,308 ஆக உயர்ந்துள்ளது. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இ-பாஸ் இருந்தால் மட்டுமே மக்கள் மாவட்ட எல்லையை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com