திருப்பூர் வெள்ளக்கோவிலில் கார் மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற செவிலியர் பலி

திருப்பூர் வெள்ளக்கோவிலில் கார் மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற செவிலியர் சம்பவ இடத்திலேயே பலியானார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருப்பூர் வெள்ளக்கோவிலில் கார் மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற செவிலியர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் காங்கயம் சாலை கே.பி.சி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்பவருடைய மனைவி வளர்மதி (54). இவர் 20 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள காங்கயத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வந்தார்.

இவர் சனிக்கிழமை இரவு வேலை முடிந்து ஸ்கூட்டரில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காங்கயம் - வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கோவில் முன்புறமுள்ள இரட்டைக்கிணறு அங்காளம்மன் கோயில் அருகில் பின்னால் வந்த கார் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com