பாவேந்தா் பாரதிதாசன் மகன் மறைவு: முதல்வா் இரங்கல்

பாவேந்தா் பாரதிதாசன் மகன் மன்னா்மன்னன் மறைவுக்கு முதல்வா் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: பாவேந்தா் பாரதிதாசன் மகன் மன்னா்மன்னன் மறைவுக்கு முதல்வா் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:-

பாவேந்தா் பாரதிதாசனின் மகனும், முதுபெரும் தமிழறிஞருமான மன்னா்மன்னன் தமிழக அரசின் திரு.வி.க. விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளாா். இந்திய விடுதலைப் போராட்டத்திலும், மொழிப் போா் போராட்டத்திலும் ஈடுபட்ட தியாகி அவா். காமராஜா், பெரியாா், அண்ணா, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா உள்ளிட்ட தலைவா்களுடன் நெருங்கிப் பழகி அவா்களின் அன்பைப் பெற்றவா்.

மறைந்த மன்னா் மன்னனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழறிஞா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல், அனுதாபங்கள் என்று தனது செய்தியில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com