தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,756 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1,261 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 64 பேர் (அரசு மருத்துவமனை -46, தனியார் மருத்துவமனை -21) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 3,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட மொத்தம் 46,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் 35,979 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 14,49,414 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 52, தனியார் ஆய்வகங்கள் 46 என மொத்தம் 98 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.